சனி, 21 மார்ச், 2015

ஸ்ரீ ரெங்க விமானம்

இது பிரணவாக்ருதி விமானம் எனப் பெயர் பெரும் ஓம் எனும் எழுத்து வடிவில் அமையப்பெற்றது. மேல்தளம் பொன்தகடுகள் வேயப்பட்டது. விமானத்தின் மேல் தாமரை இதழ்களுக்கு மத்தியில் 4 பொற்கலசங்கள் உள்ளன. இவை நான்கும் நான்கு வேதங்கள் எனச் சொல்லப்படுகிறது.

விமானத்தின் தெற்கு பக்கம் விச்வக்சேனர் சங்கு சக்கரத்துடன் சேனாதிபதியாக இருக்கிறார். சக்கரம் பக்கவாட்டில் சுழழுவது போல் அமைந்துள்ளது. பொன்மயமான காட்சி மேற்கில் அச்சுதன் வடக்கே கோபாலன் கிழக்கு பக்கம் அனந்தன் ஆகியோர் அலங்கரிக்கின்றனர். திருச்சுற்று 4 மூலைகளிலும் நாராயணர்,நாபிநளினர்,நாகசயனர், நரசிம்மர் அகியோர் விமானத்தை காவல் புரிகின்றனர்.

விச்வக்சேனர் சேனை முதலியார், படைத்தலைவர். உலகைக் காக்க எங்கும் செல்ல வல்ல படையை உடையவர். வைகுண்டத்தில் நித்தயசூரிகளில் ஒருவர், இவரே கணபதியுமாவார்.

இம்மாதிரியான பொன்கூரைகள் வேய்ந்த விமானங்கள் நம் நாட்டில் மிகக் குறைந்த ஆலயங்களே உள்ளன. உதாரணத்திற்கு திருவரங்கம் திருமலை, (ஆனந்த நிலைய விமானம்), சிதம்பரம் (நடராஜர் சந்நதி விமானம்)  

இந்த ரெங்கவிமானத்தை காண யாவரும் கட்டணம் செலுத்தி உயரமான இடத்திலிருந்து காண வசதி செய்யப்பட்டுள்ளது. குறிப்பாக வெளிநாட்டார் முக்கியமாக காண விழைகின்றனர். சிலர் அருகில் இருந்தும் காணலாம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக