சனி, 21 மார்ச், 2015

விழாநாட்கள் வாகன சேவைகளும்

முதல்நாள்;-
கொடியேற்றம் நடைபெரும் மாலையில் நம்பெருமாள் உபயநாச்சியாருடன் வீதி வலம் வருவார். பின் யாகசாலை சென்று திருமஞ்சனம் கண்டருளி கண்ணாடி அறை சேர்தல்.

இரண்டாம்  நாள் :-
காலை வீதி வலம் வந்து உபயதார் மண்டபம் செல்வது. பின் கற்பக விருகூத்தில் புறப்பட்டு கண்ணாடு அறை சேர்தல்.

மூன்றாம் நாள் சிம்ம வாகனத்தில் புறப்பாடு உபயதாரர் மண்டபம் அடைதல் பின் கண்ணாடி அறையிலிருந்து புறப்பட்டு இரட்டை பிரபையில் வீதி வலம் உபயதார் மண்டபம் சேர்தல். பின்னர் மாலையில் ஆஞ்சநேயர் வாகனத்தில் புறப்பாடு வீதிவலம்.

 ஆறாம் நாள்:-
காலை ஹம்ஸ வாகனத்தில் புறப்பட்டு வீதிவலம் வந்து பின் பல்லக்கில் புறப்பட்டு வழிநடை உபயங்கள் கண்டருளி உபயதார் மண்டபம் சேர்தல் பிறகு தோளுக்கினியனில் பட்டு யானை வாகன மண்டபம் சேர்ந்து யானை வாகனத்தில் புறப்பட்டு வீதிவலம் வருவார் உள் ஆண்டாள்  சந்நதியில் மாலை மற்றி கண்ணாடி அறையில் பொதுஜனசேவை மாலையில் நம்பெருமாள் உபயநாச்சியாருடன் திருச்சிவிகையில் புறப்பட்டு நெல் அளவு கண்டு வீதிவலம் வருதல் இரவு தாயார் சந்நதியில் திருமஞ்சனம் கண்டருளல். இந்த ஆலயத்தில் பெருமாளுடன் உபயநாச்சியாராக இருவரும் அமர்ந்த கோலத்தில் இருப்பார். மற்றைய ஆலயங்களில் நின்றகோலம்தான்.

எட்டாம் திருநாள்:-
காலை வெள்ளிக்குதிரை வாகனத்தில் புறப்பட்டு வீதிவலம் வருதல் பின் ரெங்கவிலாச மண்டபம் அடைந்து மாலையில் தங்கக் குதிரை வகனதில் புறப்பட்டு வீதிவலம் வருதல் தேரடியில் வையாளிகண்டருளல் கண்ணாடி அரைசேர்தல் 

ஒன்பதாம் திருநாள்:

திருத்தேருக்குப் புறப்படுவது ஏதோற்சவம் முடிந்து பிறகு ரதம் சென்றபாதை சரியாக உள்ளதா என பார்ப்பதற்காக உலாவருவதாக ஒரு ஐதீகம் மேலே குறிப்பிட்ட ஒன்பது நாட்களும் சித்திரை மாதம் நடக்கும் ஏதோற்சவதிற்கு சம்பந்தப்பட்டது.

ஏகாதசி திருவிழா சமயம் முலவருக்கு விலைமதிப்பற்ற முத்துக்களால் வெல்வெட் துணியில் தயாரிக்கப்பட்ட முத்தங்கி சாத்தப்படும் இதணை செய்தளித்தவர் நாயக்க மன்னர் விஜயரங்க சொக்கநாத நாயக்கர். முத்துக்கள் பதித்த மேலாடை முத்தாங்கியாகும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக