சனி, 21 மார்ச், 2015

பூஜைகள் நடப்பது எப்படி?

அறிவுப்புப் பலகையில் தெரிவித்திருப்பதும்
பகவானே திருவாய் மலர்ந்தருளியதாய் பகவத்சாஸ்திரம் என்னும் இந்த சாஸ்திரத்தை அளந்தாழ்வான் கருடாழ்வான் சேனேசன் பிரம்மன் இந்திரன் இவ்வைவருக்கும் பஞ்சாயுதாம்சர்களாக அவதரித்த ஔபகாயநர், சாண்டில்யர், பரத்வாஜர், கெளசிகர், மெளஞ்சியாயனர் எனும் ஐந்து ரிஷிகளுக்கும் ஐந்து இரவுகளில் தன்னை ஆராதிக்க வேண்டிய தத்துவங்களை உபதேசித்தப்படியால் ஸ்ரீபஞ்சராத்ரம் என்றும் நான்கு வேதங்களின் தத்துவங்கள் அமைந்திருப்பதாலும் “மோஷாயநாய வைபந்த ஏத தந்யோந வித்யதே” என்கிறபடி மோஷத்திற்கு இதுதான் வழியானதாலும் “ ஏகாயநவேதம் என்னும் பெரும் பெயர் பெற்ற ஸ்ரீபஞ்சாத்ர ஆகம முறைப்படி ஆராதனாதிகளை ஸ்ரீதேவி, பூதேவி சமேதராக  பெரிய பெருமாள் கண்டருளுகிறார். இப்படியே தினமும் பூசைகள் நடத்தப்படுகிறது. பக்தர்கள் இந்த அறிவிப்புகளை எல்லாம் படித்தால் கோவிலை பற்றிய விஷயங்களை தெரிந்து கொள்ள வாய்ப்பாக இருக்கும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக