ஞாயிறு, 1 மார்ச், 2015

காப்பு

ஓம் கணேசாய நம 
ஓம் நமோ நாராயணாய

                               அணியரங்கன் சிறப்பை அடியேன் யவன் செப்ப
                               பணிவாகக் கொண்டேன், துணிந்தேன் – பணிந்தேன்
                               துணையாகத் தும்பிக்கை யோன்விநாய கனேநின்
                               இணையடியே பற்றி னேன்

பார் போற்றும் பழங்கோவில், பாரோர் போற்றும் பழங்கோவில், பாகவதர்கள், ஆழ்வார்கள், ஆச்சாரியார்கள்  பாடிப் பரவிய பழங்கோவில், பன்னாட்டார்கள் காண விழையும் கலைகோவில், மாடமாளிகை மதிற்சூழ் பழங்கோயிலாம். வைணவ ஆலயம், திருவரங்கம் எனவும், பூலோக வைகுண்டம் எனவும், பெரிய கோவில் எனவும் வழங்கும் திருவரங்கத்தை அடைந்து எம்பெருமான் அரவணைத் துயில்வான் அரங்கநாதனை சேவிக்கப் புறப்படுவோம் வாரீர்!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக